சாென்னதை செய்யணும் : இல்லையென்றால், ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ஸ்டாலின் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-30 16:27 GMT

பைல் படம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மீனவர் பிரிவு சார்பில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்றவில்லை எனவும், காலம் காலமாக நிலைத்து நிற்பதற்காக மட்டுமே வாக்குறுதிகள் வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு குடும்பம் ஆட்சியமைப்பதற்காக வாக்குறுதியை வழங்கியுள்ளது.

மீனவர்களுக்காக, டீசல் மாணியம் 1800 லிட்டரிலிருந்து 2 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்கப்படும், மழைக்காக நிவாரண தொகை 5 ஆயிரத்திலிருந்து 6ஆயிரமாகவும் உயர்த்தி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக நிறைவேற்றவில்லை என கூறினார்.

தேர்தல் வாக்குறுதியாக அறித்ததை விரைவில் நிறைவேற்றவில்லையென்றால் முதல்வர் ஸ்டாலின் இல்லம் முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும். மீனவர்களுக்கு தொடர்ந்து துணை நிற்பது பாஜக மோடி மட்டுமே  கடந்த 7 ஆண்டுகளில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதா?

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் 400க்கும் மேற்பட்டவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதுபோன்று மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது பாஜக அரசு தான். ஆனால் தவறான பிரச்சாரங்களை மீனவர்களிடம் செய்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

மத்திய இணையமைச்சர் முருகன் விரைவில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கோண்டு, மீனவர்களின் பிரச்சினைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். இதனை தொடர்ந்து திமுகவை கண்டித்து பதாகைகள் ஏந்தி பாஜகவினர் முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News