கொரோனா நிவாரண நிதியாக ரூ 5 கோடி

ஜோஹோ நிறுவனம்

Update: 2021-05-13 13:20 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பு நிதியாக தாராளமாக கொடுக்க முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள்  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 5 கோடி ஜோஹோ நிறுவனம் கொடுத்துள்ளது.

இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குமார் வேம்பு அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இந்த நிதியை கொடுத்தார். இதனையடுத்து ஜோஹோ நிறுவனத்திற்கு தமிழக அரசு தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News