முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு - தமிழக அரசு அறிவிப்பு

Update: 2021-06-08 01:53 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது. கொரோனா காலத்தில் முன்களத்தில் நின்று பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News