மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி கைது

மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார், 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-21 06:39 GMT

பைல் படம்

ஐஸ்ஹவுஸ் போலீசார், செல்லம்மாள் தோட்டம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, மூதாட்டி ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், ராயப்பேட்டை, முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த சாந்தி, 70, என்பது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News