உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: குடியரசு தலைவருக்கு திமுக எம்பி கடிதம்

Update: 2021-06-20 16:13 GMT

உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி வில்சன் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஒரு சீரான முறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஐகோர்ட்டில் அதிக நீதிபதிகளை கொண்டிருந்தாலும் அந்த குறிப்பிட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.உதாரணமாக ஆந்திர ஐகோர்ட்டில் 37 நீதிபதிகள் மட்டுமே இருக்கக்கூடிய சூழலில் இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். அதே நேரத்தில் சென்னை ஐகோர்ட்டில், 75 நீதிபதிகள் இருந்தும் ஒரே ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி மட்டுமே உள்ளார். எனவே விகிதாச்சார அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும்போது, மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் நியமனங்கள் இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவது அத்தியாவசியமாகிறது, எனவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும் போது சமூகநீதியை கடைபிடிக்கவும் மாநிலங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதை உறுதி செய்யவும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அந்த கடித்தில் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News