சென்னை கோயம்பேட்டில் பஸ் பயணியிடம் ரூ.4 லட்சம் கேமரா திருட்டு

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பஸ் பயணியிடம், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா திருடு போனது.

Update: 2021-09-16 09:45 GMT

கோயம்பேடு பேருந்து நிலையம் (கோப்பு படம்)

சென்னை, எம்ஜிஆர் நகர் அண்ணா குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக், (33). இவர் காஞ்சிபுரம் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார். அங்கு, ஒன்றாவது நடைமேடையில் நின்ற, காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏறி, தன்து இருக்கையின் மேல்  உள்ள பகுதியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராவை வைத்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தபோது, மேலே வைத்திருந்த கேமரா இருந்த பை, திருடு போனது தெரியவந்தது. இது தொடர்பாக, கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில், கார்த்திக் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News