சென்னை மாநகராட்சி: திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-19 18:21 GMT

சென்னை மாநகராட்சியில் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா  தலைமையில் இன்று 19/06/2021 ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி . துணை ஆணையாளர் (பணிகள்) எம்.எஸ் பிரசாந்த் , துணை ஆணையாளர் (வருவாய்) விஷு மகாஜன், துணை ஆணையாளர் (சுகாதாரம்) நர்னாவாரே மணிஷ் சங்கர் ராவ், துணை ஆணையாளர் (கல்வி) திருமதி சினேகா, வட்டார துணை ஆணையாளர்கள் சிம்ரன்ஜீத் சிங் கலான், . சரண்யா தலைமைப் பொறியாளர்கள் மேற்பார்வையாளர்கள், மாநகர மாநகர நல அலுவலர், மாநகர மருத்துவ அலுவலர் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News