புதிதாய் பிறந்த குழந்தைகளின் வலிப்பு நோயும் கண்டறியும் சோதனைகளும்..!

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வலிப்பு வருவது எதனால்? அதை கண்டறியும் சோதனைகள் என்ன போன்றவைகளை அறிவோம் வாருங்கள்.

Update: 2023-08-04 13:08 GMT

Convulsion on born baby-குழந்தைகளுக்கான வலிப்பு (கோப்பு படம்)

புதிதாய் பிறந்த குழந்தைகளின் வலிப்பு என்பது அசாதாரணமான மூளை செயல்பாடுகளால் உடலின் சில பகுதிகளில் ஏற்படும் அசாதாரண இயக்கங்கள் ஆகும். அந்த வலிப்பு நோயின் தாக்கங்களைக் கண்டறியும் சோதனைகள் கீழே தரப்பட்டுள்ளன :

எந்தவொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைக்கு வலிப்பு இருப்பதாக தெரியவந்தால் பெற்றோரின் முதல் எதிர்வினை, “பிஞ்சு குழந்தையாக இருக்கிறதே?”, “இந்த வயதில் குழந்தைக்கு வலிப்பு வருமா?”, உயிர் பிழைக்குமா?", பிழைத்தாலும் அவர்கள் சாதாரணமாக குழந்தைகளாக இருப்பார்களா?", "அவர்கள் தொடர்ந்து வலிப்பு நோயால் பாதிக்கப்படுவார்களா?" இவை அனைத்தும் பெற்றோரின் மனதில் தோன்றும் பொதுவான கேள்விகள். சிலர் அதை வெளிப்படுத்திவிடுகிறார்கள். சிலர் அமைதியாக இருந்து அவதிப்படுகிறார்கள்.


"பிறந்த குழந்தைகளுக்கு வரும் வலிப்பு என்பது மூளையின் அசாதாரண செயல்பாடு காரணமாக உடலின் பிற பகுதிகளின் அசாதாரண இயக்கங்கள் ஆகும். அவை ஒப்பீட்டளவில் அரிதானவை. 1000 குழந்தைகளில் ஒரு குழந்தையை பாதிக்கின்றது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வலிப்பு பெரும்பாலும் தடுக்கக்கூடியவை என்பதே மருத்துவ உண்மை.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மூளை மிக வேகமாக வளரும். அவர்களின் மூளையின் அளவு (பிறக்கும் போது தலை சுற்றளவு 35 செ.மீ. மற்றும் 2 வயதிற்குள் பொதுவாக 50 செ.மீ. இருக்கும்.) வயது வந்தவரின் தலையின் அளவு பொதுவாக 54 முதல் 55 செ.மீ வரை இருக்கும். அதாவது 90சதவீத மூளை வளர்ச்சி முதல் 2 ஆண்டுகளில் நடக்கிறது. எனவே புதிதாகப் பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சியின் நிலைகளில் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அதனால் வலிப்பு தடுக்கப்படலாம். தடுக்கப்பட வேண்டும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உள்ள வலிப்பு "வெளிப்படையாக" அல்லது "நுட்பமாக" இருக்கலாம். கவனிப்பவர் போதுமான அனுபவம் இல்லாவிட்டால், இது எளிதில் தவறவிடப்படலாம். வலிப்புத்தாக்கங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும். பொதுவாக அடிப்படை காரணத்தை கண்டறிந்து சிகிச்சையளிப்பது போதுமானது.

ஹைபோக்ஸியாவிற்கு ஆக்ஸிஜன், ஹைபோகால்சீமியாவிற்கு கால்சியம் சப்ளிமெண்ட், இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்றவை. ஆனால் சில சமயங்களில் காரணம் தெரியாமல் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டால் வலிப்பு எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தலாம். சில மாதங்களுக்கு அது போதுமானதாக இருக்கும். பொதுவாக வெளிப்படையான வலிப்பு அது இருக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. வலிப்பு இருக்கும் நாட்களைப்பொறுத்து காரணங்கள் அதிலிருந்து அறியப்படுகின்றன.


வெளிப்படையாக, இவை பொதுவான விதிகள் என்றாலும் சில நேரங்களில் ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்குகள் உள்ளன :

1. பிறந்த முதல் நாளில் குழந்தைக்கு ஏற்படும் பெரும்பாலான வலிப்பு மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் ஏற்படுகிறது. மூளையில் குறிப்பிடத்தக்க வீக்கத்தை ஏற்படுத்தும் பிறப்பு காயங்கள் சில நேரங்களில் மூளையின் குறைபாடுகள் அல்லது சிதைவுகள் காரணமாகவும் இருக்கலாம்.

2. இரண்டாம் நாள் வலிப்பு பொதுவாக குறைந்த கால்சியம், குறைந்த மெக்னீசியம், குறைந்த சர்க்கரை போன்ற சில மின் இரசாயனங்களின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிற அசாதாரணங்களால் ஏற்படுகிறது. அவை சரி செய்யப்பட்டால் சரியாகிவிடும்.

3. மூன்றாம் நாள் வலிப்பு பொதுவாக மோசமானதாக கருதப்படுகிறது - அதாவது இயற்கையில் வளர்சிதைமாற்றம் - கார்போஹைட்ரேட்டுகள் அல்லது புரதங்கள் அல்லது கொழுப்புகள் உணவை ஜீரணிப்பதில் உள்ள சிக்கல்கள் - மேலும் இந்த உணவுப் பொருட்களின் வளர்சிதை மாற்றங்கள் நச்சு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. பொதுவாக மூளை வீக்கம் காரணமாக வலிப்பு ஏற்படுகிறது. அதன் விளைவாக. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சேதம் ஏற்படுவதால் இதைக் கண்டறிவது மிகவும் அவசியமானதாகும். இங்குதான் வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கான புதிதாகப் பிறந்த ஸ்கிரீனிங் முக்கியமானது மற்றும் சர்வதேச  நடைமுறைகளின்படி அனைத்து குழந்தைகளுக்கும்  ஒரு விதியாக சோதனை செய்யப்படுகிறார்கள்.

4. நான்காம் நாள் வலிப்பு பொதுவாக மரபணு காரணங்களால் மேலே உள்ள ஏதேனும் காரணிகளால் இருக்கலாம்.

5. ஐந்தாவது நாள் வலிப்பு - கடந்த காலங்களில் பாரம்பரியமாக "தெரியாத காரணிகள்" என்று அழைக்கப்பட்டது, ஆனால் சமீபத்தில் பயோட்டின் குறைபாடு ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.

நுட்பமான வலிப்புத்தாக்கங்கள் சில சமயங்களில் சுட்டிக்காட்ட முடியாத அல்லது கண்டறிவதில் கடினம் மேலும் அனுபவமில்லாத புதிய ஊழியர்களால் எளிதில் தவறவிடப்படலாம். குழந்தைகளின் அசாதாரண அழுகை, அசாதாரண அசைவுகள் அல்லது அசாதாரண நடத்தை அல்லது சில நேரங்களில் கைகள் அல்லது கால்களை சைக்கிள் ஓட்டுவதுபோல அசத்தல்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வலிப்பு நோயைக் கண்டறிவதற்கான சோதனைகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வலிப்புகளைக் கண்டறிவதற்கான சோதனைகளில் இரத்தப் பரிசோதனைகள் மெல்லாம் எலக்ட்ரோலைஸ், கால்சியம், மெக்னீசியம், வளர்சிதை மாற்றத்தடை கண்டறிதல் மற்றும் சில சமயங்களில் மூளை அலைச் செயல்பாடு சோதனை EEG மற்றும் MRI மூளை போன்ற ஸ்கேன் எடுத்தல் போன்றவை வலிப்புக்கான உடனடி காரணத்தை கண்டறிய பயன்படும். இதன் மூலம் வாழ்நாள் முழுவதுக்குமான சேதம் தடுக்கப்படுகிறது.

இந்த நாட்களில், எந்த காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், வலிப்புக்கான மரபணு ஆய்வுகளை செய்வதன் மூலம் கண்டறியலாம்.

இந்த கட்டுரை ஒரு வழிகாட்டும் தகவல். முழுமையான விபரங்கள் பெறுவதற்கு மருத்துவரை சந்தித்து விபரங்கள் பெறுவது அவசியம். 

Tags:    

Similar News