/* */

திருத்தணி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவன் தற்கொலை

திருத்தணி அருகே தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

திருத்தணி அருகே  விஷம் குடித்து கல்லூரி மாணவன்  தற்கொலை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கோபாலபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகன் துளசிதாஸ் (17) ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் துளசிதாஸ் திருத்தணி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனை அடுத்து துளசிதாஸ் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் சக நண்பர்களுடன் ஊர் சுற்றி வருவதாக சுந்தரமூர்த்திக்கு தெரியவந்தது.

இதனால் மகன் படிப்பு பாதியிலேயே நின்று எதிர்காலம் மோசமாக விடும் என்ற நினைத்த சுந்தரமூர்த்தி மகனை தட்டி கேட்டுள்ளார். இதில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து துளசிதாஸ் விஷம் அருந்தி மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மயங்கி கீழே விழுந்து கிடந்த துளசிதாசை மீட்டு உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரிக்கு செல்லாமல் ஊர சுற்றி வந்த மகனை தட்டிக் கேட்டதற்கு விஷம் அறிந்து இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 Jan 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?