/* */

பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் கைது

பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

பெரியபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த  இரண்டு இளைஞர்கள் கைது
X

பெரிய பாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனைகளில் தனிப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவல் அடிப்படையில் அப்பகுதியில் தனிப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியபாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுனில்(20) ஆமிதாநல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் வயது (22) ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 250 கிராம் கஞ்சாவை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

Updated On: 12 Aug 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு