/* */

கட்டி முடிக்கப்பட்ட புது வீட்டில் வாடகைக்கு குடியேறியவர் மின்சாரம் தாக்கி சாவு

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு குடியேறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கட்டி முடிக்கப்பட்ட புது வீட்டில் வாடகைக்கு குடியேறியவர் மின்சாரம் தாக்கி சாவு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படும் புதிய வீடு.

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன்குமார். என்பவர் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ஊராட்சி 21 செஞ்சுரிநகரில் புதிய வீடு கட்டி கடந்த மாதம் 21ம் தேதி வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநராக பணிபுரியும் விநாயகம், இவருக்கு கல்லூரி படிக்கும் மகளும், இன்ஜினியரிங் படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 24 வயது சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.

மகளின் கல்லூரி படிப்பிற்காக வேப்பம்பட்டு 21,செஞ்சுரிநகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்த நிலையில் இன்று காலை புதிய வீட்டில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை ஓட்டுனர் விநாயகத்தின் மகன் சக்திவேல் செய்துள்ளார்.

இந்த நிலையில் காலை சுமார் 5.30 மணி அளவில் வீட்டு மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டில் இருந்த மின் விளக்கு கம்பியை பிடித்தபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அவரது குடும்பத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து சக்திவேலை பார்த்தபோது, அவர் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர், ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சக்திவேலின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  3. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  4. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  5. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  6. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  8. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  9. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  10. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!