/* */

அரசிதழில் ஊரையே காணோம்.. கிராம மக்கள் விஏஓ அலுவலகம் முற்றுகை

பெரியபாளையம் அருகே ஊர் காணவில்லை என கிராம மக்கள் ஒன்று கூடி விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அரசிதழில் ஊரையே காணோம்.. கிராம மக்கள் விஏஓ அலுவலகம் முற்றுகை
X

பெரியபாளையம் அருகே ஊரை காணவில்லை எனக் கூறி விஏஓ அலுவலகம் முற்றுகையிட்ட கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்கள் ஏ, பி, சி என வகைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வடமதுரை கிராமம் என்பது எர்ணாகுப்பம் என வருவாய்த்துறை ஆவணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகு‌றி‌த்து பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 100க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்களது ஊரை காணவில்லை என குற்றம் சாட்டினர்.

ஊரின் பெயர் ஆவணங்களில் மாறியுள்ளதால் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிப்போம் எனவும், பெரிய அளவில் கிராம மக்கள் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 18 March 2024 6:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?