Begin typing your search above and press return to search.
கடம்பத்தூர்: சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய விஜய்மக்கள் இயக்கத்தினர்!
கடம்பத்தூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.
HIGHLIGHTS
கொரோனா ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஜய் சார்பாகவும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும், பல்வேறு கட்டமாக உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் விஜய் நடமாடும் விலையில்லா உணவகம் மூலம் திருவள்ளூர் தொகுதி தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் பிரசாந்த், விமல், ராகுல், பரத், ரமேஷ் ஆகியோர் கடம்பத்தூர் பகுதியில் மற்றும் திருவள்ளூர் நகர மக்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்து தவித்த சாலையோர வாசிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.