/* */

திருவள்ளூரில் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்

திருவள்ளூரில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
X

திருவள்ளூரில் முன்களப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

முதல் அலையில் கொரோனா தொற்றின் பாதிப்பு தமிழக அளவில் 3வது மற்றும் 4வது இடம் பிடித்தது திருவள்ளூர் மாவட்டம்.

புதிய ஆட்சி அமைந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது. இதற்கு பேருதவியாக இருந்த முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நடைபெற்று முடிந்த 75ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்களப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

பின்னர், முன்களப் பணியாளர்களுக்கு மதிய உணவினை மாவட்ட ஆட்சியர் தன் கரங்களால் பரிமாறி அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அருகில் அமர்ந்து உணவு சாப்பிட்ட முன்கள பணியாளர்களிடம் நலம் விசாரித்து சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 22 Aug 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?