கார் உதிரி பாகங்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து..!

கார் உதிரி பாகங்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து..!

கார் உதிரிபாகங்கள் சேமிப்புக்கிடங்கில் தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

செங்குன்றம் அருகே கார் உதிரி பாகங்கள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடினர்.

செங்குன்றம் அருகே கார் உதிரி பாகங்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரப்பர் உள்ளிட்டவை சேமிக்கும் சேமிப்பு கிடங்கு உள்ளது. அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இது குறித்து செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ மளமளவென பரவி அதிக ஜுவாலையுடன் எரியத்தொடங்கியதால் தீயை அணைக்கும் தடைபட்டது. மேலும் மணலி, அம்பத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கிருந்து வந்த தீயணைப்பு வீரர்களும் இணைந்து தீயை அணைக்கப் போராடினர்.


தண்ணீருடன் நுரை கலந்து அடித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகவே போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த தீ விபத்து குறித்து செங்குன்றம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story