/* */

வழிதவறி ஊருக்குள் புகுந்த மான்... வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர் அருகே, காப்புக் காட்டில் இருந்து உணவைத்தேடி ஊருக்குள் வழிதவறி வந்த மானை பிடித்து, பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

கோடைவெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காப்புக்காடு பகுதியில் இருந்து வனவிலங்குகள் கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வருவது வாடிக்கையாகி உள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மான் ஒன்று, ஊருக்குள் சுற்றி திரிவதை பொதுமக்கள் பார்த்து, வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை புல்லரம்பாக்கம் நாகாத்தம்மன் கோவில் அருகே, மோகன் என்பவரது வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்ற மான், சமையலறையில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து, மோகன் அருகில் உள்ள பொதுமக்களை அழைத்து சுற்றி வளைத்து மானை பிடித்துள்ளனர்.

பின்னர், இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் துறையினர் மற்றும் பூண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்தார். தகவல் அறிந்து வனத்துறை அதிகாரி இமானுவேல் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பிடிப்பட்ட மானை பத்திரமாக மீட்டு , புல்லரம்பாக்கம் காப்புக்காடு வனத்துறை பகுதியில் விட்டனர்.

மான்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற வசதிகளை காட்டுக்குள் குட்டைகளை அமைத்துள்ளதாகவும், ஆனாலும் ஒருசில மான்கள் வழிதவறி இதுபோன்று ஊருக்கு சென்று விடுவதாகவும், வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 April 2021 1:19 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...