/* */

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும் திருவள்ளூர் பஜார் வீதியில் திரண்ட கூட்டம்!

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும் திருவள்ளூர் நகர் பஜார் வீதிகளில் திரண்ட மக்களால் தொற்று அதிரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

HIGHLIGHTS

ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும்  திருவள்ளூர் பஜார் வீதியில் திரண்ட கூட்டம்!
X

ஊரடங்கை மீறி திருவள்ளூர் பஜார் வீதியில் திரண்ட மக்கள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. நகர் பகுதிகளில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் தொற்று பரவி வருவதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் காய்கறி, பழங்கள் மலர்கள், உரக்கடைகள், மளிகை கடைகள் மட்டும் திறந்து சமூக இடைவெளியை கடைப் பிடித்து விற்பனைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் வழக்கம்போல மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் குவிந்து பொருட்கள் வாங்கி செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டும் இதே நிலை தொடர்கிறது. இதனால் நோய் தொற்று அதிக அளவில் பரவும் அபாயம் நிலவுகின்றது. தொடர்ச்சியாக வாகனங்கள் சென்று வந்தாலும், அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையிலும் போலீசார் முறையாக வாகன சோதனையை மேற்கொண்டாலும் கூட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

Updated On: 14 May 2021 5:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!