/* */

லஞ்சம் வாங்கிய வழக்கு: அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ரூ 2500.ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு

HIGHLIGHTS

லஞ்சம் வாங்கிய வழக்கு: அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்

திருவள்ளூரில் ரூபாய் 2500. லஞ்சம் வாங்கிய கலெக்டர் அலுவலக ஊழியருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை அளித்து திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ரவிக்குமார். இவர் மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு சல்பர் எடுத்துக் கொள்வதற்கு உரிமம் பெற வேண்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எஸ். அலுவலகத்தில் சென்று கடந்த 2010ஆம் ஆண்டு மனு கொடுத்திருந்தார். இந்த மனு பரிசீலனை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது .

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் அதே அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் விபீஷணன் என்பவரை ரவிக்குமார் சந்தித்து தன் அளித்த மனுவினை பரிந்துரை செய்து உரிமம் பெற்று தர வேண்டுமெனக் கூறியுள்ளார். அதற்கு உரிமம் பெற்றுத்தர வேண்டும் என்றால் ரூபாய் 2500 லஞ்சம் தந்தால்தான், அந்த மனுவை பரிசீலனை செய்து பரிந்துரை செய்வதாக ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவிக்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கடந்த 16.12.2010ஆம் தேதி அன்று புகார் அளித்தார். இதையடுத்து ரவிக்குமாரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் கலந்த பணத் தாள்களை கொடுத்து விபீஷணனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி அந்த பணத்தாள்களை விபீஷணன் பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வேலரசு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அலுவலர மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி விபீஷணனுக்கு நான்கு வருடம் சிறை தண்டனையும் ரூபாய் 20.000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.



Updated On: 18 March 2023 5:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்