/* */

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம், 8 சவரன் நகைக்கொள்ளை

திருவள்ளூரில் வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து 7 லட்சம் ரொக்கம், 8 சவரன் நகை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம், 8 சவரன் நகைக்கொள்ளை
X

பைல் படம்.

திருவள்ளுவர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் தமிழரசன் (35). இவரது மனைவி பிரியா தனியார் தொழிற்சாலை பணிபுரிந்து வருகிறார். இவர் தாய் வீட்டிற்குச் சென்றிருப்பதால், தமிழரசன் அருகே உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அன்று இரவு வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 8 சவரன் நகை,250 கிராம் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 7 லட்சம் பணம் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

வீடு கட்டுவதற்காக 7 லட்ச ரூபாய் கடன் வாங்கி வைத்து இருப்பதாகவும் அந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து தமிழரசன் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 21 Aug 2021 3:16 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்