/* */

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா; அலுவலகம் மூடல்

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக கணக்காளர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அலுவலகம் மூடப்பட்டது

HIGHLIGHTS

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  2 பேருக்கு கொரோனா; அலுவலகம் மூடல்
X

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது அலை கொரோனா நோய் தோற்று வேகமாக பரவி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 1385 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வரும் கணக்காளர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்றுநோய் கண்டறியப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது. இன்றும் நாளையும் எந்த பணிகளும் நடைபெறாது என்றும், வருகிற திங்கட்கிழமை முதல் மீண்டும் பணிகள் தொடரும் எனவும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 7 May 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...