/* */

வெங்கல் அருகே சுடுகாட்டு இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

வெங்கல் அருகே சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்ததாகக்கூறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வெங்கல் அருகே சுடுகாட்டு இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாம்பளள்ம் ஊராட்சிக்கு உட்பட்ட காதர்வேடு கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றின் அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டின் சுமார் 2.70 ஏக்கர் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தில் தனிநபர் உழுது விவசாயம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இதனை கண்டித்து கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுடுகாட்டிற்கு சொந்தமான நிலத்தை அக்கிரமித்துள்ளதால் உயிரிழந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், புதைப்பதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கல்பனா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் மற்றும் காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு