Begin typing your search above and press return to search.
பூந்தமல்லி சுகாதாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
பூந்தமல்லி சுகாதாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வாரத்தின் தொடர்ச்சியாக பூவிருந்தவல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் துணை இயக்குனர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டிகள் மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துணை செவிலியர் பயிற்சி மாணவிகளும் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மலரிய அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.