/* */

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மடிமை கண்டிகை கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  முற்றுகை போராட்டம்
X
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்துக்குட்பட்ட மடிமை கண்டிகை கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் காலம் காலமாக அருகிலுள்ள பீரங்கி மேடு கிராமத்தில் கிராமத்தினரும் அடிமை கண்டிகை கிராமத்தினரும் இணைந்து கூட்டு வழிபாடு நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்ட கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான செலவை இரு கிராமத்தினரும் சேர்ந்து ஏற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இதற்கு பீரங்கி மேடு கிராமத்தினர் உடன்படாமல் நிர்வாகத்தில் இருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் கோவில் புணரமைப்புக்காண முழு செலவையும் மடிமை கண்டிகை கிராமத்தினர் செய்து வருகின்றனர். செப்டம்பர் 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென பீரங்கி மேடு கிராமத்தினர் கும்பாபிஷேக விழாவில் தங்களை முன்னிலைப்படுத்துமாறு தகராறு செய்து வருவதாகவும்,

இதற்கு தங்கள் தரப்பில் விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்த எந்தவித தடையுமில்லை என்று உறுதிபட தெரிவித்தும் கும்பாபிஷேக விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் மடிமை கண்டிகை கிராமத்தினர் நேற்று பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வருவாய் கோட்டாட்சியரிடம் இது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் அவர்கள் அளிந்தனர் ஏற்கனவே இதே போன்று கடந்த 19ஆம் தேதி பீரங்கி மேடு கிராமத்தினரும் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது இதனால் மேற்கண்ட இரு கிராமங்களிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 26 Aug 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?