/* */

சந்திர கிரகணம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு..

சந்திர கிரகணம் காரணமாக நவம்பர் 8 ஆம் தேதி சிறுவாபுரி முருகன் கோயிலில் நன்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சந்திர கிரகணம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு..
X

கோயில் நிர்வாகம் வைத்துள்ள அறிவிப்பு பலகை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய்தீபம் ஏற்றி கோயிலை சுற்றி வந்து வழிபட்டால் வீடு கட்டுதல், இடம் வாங்குதல், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதனால், அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சிறுவாபுரி சுற்றியுள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

மேலும், இந்தக் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 21.ஆம் தேதி இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதன் பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜையும் சிறப்பாக நடைபெற்றது. மண்டல பூஜை நிறைவு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் அன்றையதினம் பல்லாயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றையதினம் சந்திர கிரகணம் என்பதால் கோயில் நண்பகல் 12 மணியுடன் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக சிறுவாபுரி முருகன் கோயில் முன்பு கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை விவரம் வருமாறு:

நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் அன்றையதினம் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 12 மணிக்கு கோயிலின் நடை சாத்தப்பட்டு சந்திர கிரகணம் முடிவடைந்த பின்னர் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோயில் மூடப்படும். எனவே, நவம்பர் 8 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் சுவாமி தரிசனத்திற்கு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படுள்ளது.

பொதுவாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் உள்ளிட்ட நாட்களில் கோயில் நடை விரைந்து சாத்தப்படுவதும், அதன் பிறகு உரிய பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்படுவதும் வழக்கமான நடைமுறைதான் என ஆன்மிக பெரியோர்கள் கருத்து தெரிவத்துள்ளனர்.

Updated On: 7 Nov 2022 4:38 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    மதுரையில் புரோட்டா மாஸ்டர் பயிற்சி பள்ளி..! சர்வதேச உணவான புரோட்டா..!
  2. தென்காசி
    8 நாட்களுக்குப் பின் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில்...
  3. கடையநல்லூர்
    தமிழக - கேரளா எல்லையில் பிடிபட்ட 12 அடி ராஜ நாகம்
  4. கல்வி
    உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்
  5. திருப்பரங்குன்றம்
    சோழவந்தான் ஆலயங்களில் வைகாசி திருவிழா..!
  6. கல்வி
    அறிவியல் மாணவர்களுக்கான 10 தொழில் வாய்ப்புக்கள்
  7. இந்தியா
    இந்தியாவில் கொடி கட்டிப்பறக்கும் உணவுத்துறை
  8. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே பலத்த மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்