/* */

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம் ரெட்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் ரவீந்திரன்(32). விவசாயி. இவருக்கும் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே புது குப்பத்தை சேர்ந்த சங்கவி (25) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த சங்கவி விவசாயத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த உறவினர்கள் சங்கவியை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் சங்கவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, கணவன் மனைவியிடையே சண்டையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆகி மூன்று மாதமே ஆன பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 24 Aug 2022 8:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...