Begin typing your search above and press return to search.
எளாவூர் தலையாரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
எளாவூர் தலையாரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் தலையாரிபாளையம் ஏரிக்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசர் அங்கு அதே பகுதியை சேர்ந்த இருவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. பின்பு அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர்.