/* */

கும்மிடிப்பூண்டி: வீட்டின் அருகே மது பாட்டில்கள் பதுக்கல்: கூலித் தொழிலாளி கைது!

கும்மிடிப்பூண்டி பார்த்தபாளையம் கிராமத்தில் வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: வீட்டின் அருகே  மது பாட்டில்கள் பதுக்கல்: கூலித் தொழிலாளி கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பாத்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் (37) கூலித்தொழிலாளி.

இவர் வீட்டின் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சென்ற போலீசார், அவரது வீட்டின் அருகே உள்ள மர புதரில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 40 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி சந்தானத்தை கைது செய்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 15 Jun 2021 3:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்