வடமதுரையில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு..!

வடமதுரையில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு..!

அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு 

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியபாளையம் அருகே வடமதுரையில் அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பெரியபாளையம் அருகே வடமதுரையில் பேரறிஞர் நினைவு நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாள் தமிழக முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகில் இருந்து வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜே. மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் கட்சிக் கொடிகளை கையில் ஏந்தி பேரணியாக நடந்து வடமதுரை அரசு தொடக்கப்பள்ளி அருகே உள்ள அண்ணாவின் சிலை அருகே வந்து அடைந்தனர்.

அங்கு அண்ணாவின் திருவுருவ சிலைக்கு ஒன்றிய செயலாளர் பிஜே. மூர்த்தி மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, தல இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ரவிக்குமார், ஏனம்பாக்கம் சம்பத், டில்லி சங்கர், சங்கர், நிர்வாகிகள் முனுசாமி, சீனிவாசன்,ஞானசேகர், அப்பன், பாக்கியலட்சுமி ரமேஷ், உமாபதி, பார்த்திபன், ஏழுமலை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story