Begin typing your search above and press return to search.
கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி கைது
கும்மிடிப்பூண்டி அருகே சோம்பட்டு கிராமத்தில் கட்சி கொடி கம்பங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி கைது
HIGHLIGHTS
கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் திமுக, அதிமுக, பிஜேபி உள்ளிட்ட கொடிக்கம்பங்கள் உள்ளது. இந்த கொடிக் கம்பங்களை கடந்த சுதந்திர தினத்தன்று அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் ஜேசிபி எந்திரத்தை வைத்து இடித்து தள்ளினார்.
மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சோம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். புகாரின் பேரில் அதிமுக நிர்வாகியை கைது செய்து 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.