/* */

பெரியபாளையம் உரக்கடையின் மேற்கூரை உடைத்து ரூ. 2 லட்சம் கொள்ளை

பெரியபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான உரக்கடையின் மேற்கூரையை உடைத்து 2லட்ச ரூபாய் திருடபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

பெரியபாளையம் உரக்கடையின் மேற்கூரை உடைத்து ரூ. 2 லட்சம் கொள்ளை
X

திருட்டு நடந்த உரக்கடை.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சேர்ந்தவர் தேன்கனி (38). இவர் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கடேஸ்வரா திரையரங்கு அருகே உரக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று தமது கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை வழக்கம் போல 7 மணி அளவில் கடையை திறந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் இருந்த பொருட்கள் சிதறிய நிலையில் கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த 2லட்ச ரூபாய் விற்பனை பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த வாரம் இந்த உர கடையின் பின்புறம் உள்ள விவசாயி வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி 30 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் தொடர் கொள்ளையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே தனிப்படை அமைத்து இதுபோன்ற தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 3 May 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்