/* */

கணவருடன் தகராறு; கைக் குழந்தைகளுடன் தாய் தற்கொலை.

திருநின்றவூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 கைக் குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கணவருடன் தகராறு; கைக் குழந்தைகளுடன் தாய் தற்கொலை.
X

தற்கொலை செய்துகொண்ட பெண்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நடுக்குத்தகை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ( பெயிண்டர்). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கௌரி என்ற பெண்ணுடன் திருமணமாகி லிசா என்ற மகளும், அஸ்வின் என்ற மகனும் உள்ளனர்.

கௌரியின் கணவரான ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நாள்தோறும் குடித்து விட்டு குடும்ப செலவிற்கு பணம் தராமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை மனைவி கௌரியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்து வெளியே சென்று விட்டார்.

இந்த தகறாறு காரணமாக மன உளைச்சலில் இருந்த கௌரி வீட்டின் மேற்கூரையில் உள்ள இரும்பு பைப்பிள் புடவையால் இரண்டு குழந்தைகளுக்கு தனித்தனியே தூக்கு மாட்டினார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனையடுத்த, கீழ் வீட்டில் குடியிருக்கும் நபர் ஒருவர் ஜன்னல் வழியே பார்த்தபோது மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஜன்னல் வழியே நுழைந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருநின்றவூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மூவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கௌரியின் கணவரான ரமேஷிடம் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் வழக்கு திருவள்ளூர் திருவுருவம் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Updated On: 18 July 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  2. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  3. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  4. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  5. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  6. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி
  8. வீடியோ
    அரசுக்கு சாராயத்தை தவிர வேற என்ன வருமானம் இருக்கு !#seeman...
  9. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  10. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது