Begin typing your search above and press return to search.
ஆவடியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி; மாணவர்கள் பங்கேற்பு
ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழக முதல்வரின் ஆணைப்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி கொரோனா 3ம் அலை பரவாமல் தடுக்க ஆவடி மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு குறித்த ஓவிய போட்டி மற்றும் விழிப்புணர்வு வாசக போட்டி நடைபெற்றது.
இதில், 21 பள்ளிகளிலிருந்து 125 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாக அப்துல் ஜாபர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஜி. பிரகாஷ், நாகராஜ், சிவகுமார், எஸ் பிரகாஷ், ரவிச்சந்திரன் மற்றும் 21 பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.