/* */

முக கவசம் அணியாததால் திருமண வீட்டில் 5 ஆயிரம் அபராதம்

திருவேற்காட்டில் நடந்த திருமணத்தில் முக கவசம் அணியாததால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு.

HIGHLIGHTS

முக கவசம் அணியாததால் திருமண வீட்டில் 5 ஆயிரம் அபராதம்
X

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்றைய தினம் திருமணத்திற்காக பதிவு செய்தவர்கள் தங்களது உறவினர்கள் 50 பேர் கலந்து கொண்டு நடத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், அங்கு யாரும் முக கவசம் அணியாமல் இருப்பதாக வந்த தகவலையடுத்து திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதார துறை ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு செய்த போது முகக்கவசம் அணியாமல் இருப்பது தெரியவந்தது.

மேலும் அதிகாரிகளை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் அவசர, அவசரமாக முக கவசத்தை எடுத்து மாட்டிக் கொண்டிருந்தனர். இதையடுத்து திருமண வீட்டார் மீது ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் நகராட்சி முழுவதும் முக கவசம் அனியாமல் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

Updated On: 25 April 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  7. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  9. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  10. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்