/* */

ஆவடியில் பயிற்சி முடித்த 300 விமானப்படை வீரர்களுக்கு வழியனுப்பு விழா

ஆவடி மையத்தில் பயிற்சி முடித்த 300 விமானப்படை வீரர்கள் பணிக்கு செல்லும் வழியனுப்பு விழாநடைபெற்றது.

HIGHLIGHTS

ஆவடியில் பயிற்சி முடித்த 300  விமானப்படை வீரர்களுக்கு வழியனுப்பு விழா
X

பயிற்சி முடித்த வீரர்களை வழியனுப்பி வைக்கும் அதிகாரிகள்.

சென்னை அடுத்த ஆவடி விமான படை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 300 வீரர்கள் பணிக்கு செல்லும் வழியனுப்பு விழா வீரர்களின் வீர சாகச நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள விமான படை மையத்தில் ஆட்டோ மொபைல் பிட்டர் மற்றும் ஆட்டோ மொபைல் டெக்னிசியன், விமான போக்குவரத்து மெக்கானிக் பயிற்சி, விமான காவல் படை, பாதுகாவலர் பயிற்சி என பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 300 வீரர்கள் வெற்றிகரமாக பயிற்சி முடித்து பணிக்கு செல்கின்றனர்.

இங்கு அளிக்கப்பட்ட 24வார கால பயிற்சியில் மெக்கானிக்கல், பிட்டர் துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களை கவுரவித்து பரிசுகள் வழங்கி வழியனுப்பும் விழாவானது ஆவடி விமான படை தளத்தில் வீரர்களின் சாகச நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஆவடி விமானப்படை மையத்தின் கமாண்டர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கி வீரர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கியதோடு சான்றுகளையும் வழங்கினார். குறிப்பாக வீரர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியில் நின்று பாதுகாப்பாக அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Aug 2021 3:53 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!