/* */

முழு கொள்ளளவை எட்டிய நம்பியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி

நம்பியாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் திசையன்விளை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

முழு கொள்ளளவை எட்டிய நம்பியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகாக்குட்பட்ட கோட்டைக்கருங்குளத்தில் அமைந்துள்ள நம்பியாறு அணையின் நீர்மட்டம் 23 அடி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் திசையன்விளை தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நம்பி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனையடுத்து கோட்டைக்கருங்குளத்தில் கிராமத்தில் அமைந்துள்ள நம்பியாறு அணை நீர்மட்டம் தனது முழுக்கொள்ளளவான 23 அடியை எட்டியது. இதனையடுத்து திசையன்விளை தாலுகாவில் உள்ள குளங்களுக்கு வலது மற்றும் இடது கால்வாயில் தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் உள்ள இடது பக்க பிரதான கால்வாய் மற்றும் வலது பக்க பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கால்வாய்களின் மூலம் 44 குளங்கள் வழியாக 368.64 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Updated On: 16 Nov 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்