/* */

முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயனுக்கு ரூ. 2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம்

டாக்டர் சுப்பராயனுக்கு ரூ. 2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம் அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு ராஜ்யசபா எம்பி., ராஜேஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயனுக்கு  ரூ. 2.50 கோடி மதிப்பில் நினைவு அரங்கம்
X

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனின் சேவைகளை நினைவு கூறும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிகக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாமக்கல்லை பூர்வீகமாக கொண்டவரும், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன் ஆவார். பல்வேறு தரப்புகளின் கோரிக்கைகளை ஏற்றும், கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் டாக்டர் சுப்பராயனின் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் பூர்வீகமான நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராம பஞ்சாயத்தில் உள்ள நிலம் சர்வே எண்.138/2ஏ1பி -இல் உள்ள மொத்த பரப்பான 0.33.37 ஹெக்டேர் நிலத்தில், அரங்கம் கட்டுவதற்காக நிலமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் சுப்பராயன் அவர்களின் வம்சா வழியினர் மற்றும் அவர்களின் சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் சார்பாகவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ராஜேஷ்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

Updated On: 19 April 2023 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை