உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணம்: திரும்பப் பெற வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணம்: திரும்பப் பெற வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜெயகுமார் வெள்ளையன்.

உயர்த்தப்பட்ட தராசுகளுக்கான முத்திரை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தமிழக அரசுக்குவேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தல் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. கொரோனா காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி, வணிகர்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலைக்கு சென்று, தற்போது படிப்படியாக மீண்டுவருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை, சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்டணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும், முறையான பயன்பாட்டிற்கான அபராத கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளது. அதில், குறிப்பாக, 30 கிலோ வரை எடை போடும் தராசுகளின் முத்திரை கட்டணத்தை, ரூ. 400ல் இருந்து, 600 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல், ஒவ்வொரு எடை போடும் தராசுகளின் அளவுகளுக்கு ஏற்ப, அதன் மறு முத்திரைக் கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள நெருக்கடியான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட முத்திரை கட்டணம் மற்றும் அபராத கட்டண அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்று, சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story