பிளஸ் 2 பிராக்டிக்கல் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 12,922 மாணவர்கள் பங்கேற்பு

பிளஸ் 2 பிராக்டிக்கல் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 12,922 மாணவர்கள் பங்கேற்பு

பிளஸ் 2 பிராக்டிக்கல் தேர்வு 

மாநிலம் முழுவதும், பிளஸ் 2 செய்முறை தேர்வு இன்று துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், 12 ஆயிரத்து, 922 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.

தமிழக அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் பிளஸ் -2 மாணவ, மாணவியருக்கு, வரும், மார்ச், 1ல் பொதுத்தேர்வு துவங்கி, 22ல் முடிகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 146 மையங்களில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு துவங்கியது.

தமிழகத்தில், நடப்பாண்டிற்கான 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள், மார்ச் முதல், ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு, வரும், மார்ச் 1ல் துவங்கி, 22 வரையும், பிளஸ் 1 தேர்வு, வரும் மார்ச் 4ல் துவங்கி, 25 வரையும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 26ல் துவங்கி, ஏப். 6 வரையும் நடக்கிறது. பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான பிராக்டிக்கல் தேர்வு நேற்று துவங்கி, வரும் 24 வரை நடக்கிறது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, மொத்தம் 197 பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 2 மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

அதில், 146 மையங்களில், இன்று முதல், செய்முறை தேர்வு துவங்கியது. அவற்றில், 12 ஆயிரத்து, 922 மாணவ, மாணவியர் செய்முறை தேர்வை எதிர் கொள்கின்றனர். அவர்களுக்கு பேட்ச் அடிப்படையில் பிராக்டிக்கல் தேர்வுகள் நடைபெறுகிறது.

Tags

Next Story