நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி  சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X
நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும், சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, சமையல் கேஸ் விநியோகம் சம்மந்தமாக, நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றிற்கு தீர்வு காணப்படுகிறது. சமையல் கேஸ் நுகர்வோர்கள் நலன்கருதி, அனைத்து ஆயில் கம்பெனி மற்றும் சமையல் கேஸ் நிறுவன மேலாளர்கள், சமையல் கேஸ் ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், சமையல் கேஸ் நுகர்வோர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன், இந்த மாதத்திற்கான சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர்கூட்டம் வருகின்ற 30ம் தேதி, மாலை 3 மணிக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்ட டிஆர்ஓ சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, சமையல் கேஸ் நுகர்வார்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிய உள்ளார். சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சமையல் கேஸ் விநியோகம் மற்றும் அது சார்ந்த கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story