வாழவந்தி பகுதியில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு

Namakkal News-வாழவந்தி பகுதியில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு ( மாதிரி படம்)
Namakkal News, Namakkal News Today- ப.வேலூர் தாலுகா வாழவந்தி பகுதியில் நாளை 9ம் தேதி, மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பரமத்தி வேலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் கோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், சீரான மின்சாரம் விநியோகம் வழங்குவததற்காக, துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மின்சார வாரியத்தின் சார்பில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, ப.வேலூர் தாலுகா வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதனால் மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி,குட்லாம்பாறை , கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரிய கரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிப்பாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை 9ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணிவரை மின்சா விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu