நாமக்கல்: அரசின் வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல்: அரசின் வேலை வாய்ப்பற்றோர் உதவி  தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
X
வேலைவாய்ப்பற்றோர், தமிழக அரசின் உதவித் தொகை பெற, தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பற்றோர், தமிழக அரசின் உதவித் தொகை பெற, தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல், 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களின் துயரை துடைக்கும் வகையில், வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மாதம், 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வரும் காலங்களில், மாதம் ஒன்றுக்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், கடந்த, 1 முதல், வரும் செப்டம்பர் 30 வரையிலான காலாண்டிற்கு, மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரார்களும், ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்திற்கு, அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் செல்ல வேண்டும். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற வெப்சைட்டில் இதற்கான விண்ணப்பத்øதை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future