நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஆட்டோ ஓட்டிச்சென்று தேர்தல் பிரச்சாரம்

நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஆட்டோ  ஓட்டிச்சென்று தேர்தல் பிரச்சாரம்

நாமக்கல் லோக்சபா தொகுதி, அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, பயணிகள் ஆட்டோவை ஓட்டிச்சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். 

நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஆட்டோ ஓட்டிச்சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, பயணிகள் ஆட்டோவை ஓட்டிச்சென்று பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக ராஹா தமிழ்மணி போட்டியிடுகிறார். அவர் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து, பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வருகிறார். நேற்று, பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பயணிகள் ஆட்டோவை ஓட்டிச் சென்று பொதுமக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் ப.வேலூர் எம்எல்ஏ சேகர் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் ஆட்டோவில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக நாமக்கல் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, வள்ளிபுரம், கீரம்பூர், ஆண்டிப்பட்டி, ஆண்டிப்பட்டிப் புதூர், உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் தமிழ்மணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வீதி வீதியாகச் சென்று அதிமுகவினரையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். நாமக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் காந்திமுருகேசன் உள்ளிட்ட பலர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story