/* */

ஜேடர்பாளையம் அணை பாசன வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஜேடர்பாளையம் தடுப்பணையில், ராஜா வாய்க்காலில் குளித்த தனியார் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம் அணை பாசன வாய்க்காலில்   மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன், இவரது மகன் சிரஞ்சீவி (20). இவர் நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கும், ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்த மாணவர் வாசுதேவன் என்பவரும், சிரஞ்சீவியும் நண்பர்கள். இதனால் சிரஞ்சீவி, சக கல்லூரி மாணவர் வாசுதேவன் வீட்டில் தங்கி, இருவரும் கடந்த 6 மாதமாக கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் சிரஞ்சீவி சம்பவத்தன்று மாலை தனது நண்பர்களுடன் ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். சிரஞ்சீவி தனது நண்பர்களுடன் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சீரஞ்சீவி சென்று குளித்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். அவரை தண்ணீரில் இருந்து மீட்க முடியவில்லை.

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் ராஜாவாய்க்காலில் மூழ்கிய மாணவர் சிரஞ்சீவியை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர் சிரஞ்சீவியின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2023 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்