நாமக்கல்லில் நாளை கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் நாளை கூட்டுறவு பணியாளர்களுக்கான  குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X
நாமக்கல்லில் நாளை கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கான குறைகளை தீர்வு செய்யும் வகையில், 2 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் “பணியாளர் நாள்” நிகழ்வு நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுரைப்படி 2 மாதங்களுக்கு ஒரு முறை, 2வது வெள்ளிக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும் “பணியாளர் நாள்” கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி “பணியாளர் நாள் முகாம்” நாளை 12ம் தேதி மாலை 4 மணிக்கு, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் 2வது தளத்தில் உள்ள, மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போதே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின்,நாளை நடைபெறும் பணியாளர் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story