நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

Namakkal news- கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

Namakkal news- நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல்லில் நாளை கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட செயலார் ராஜேஷ்குமார் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

வருகிற மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், “இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ” என்ற தலைப்பில் தேர்தலுக்கான திண்ணை பிரச்சாரம் குறித்தும் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

கூட்டத்தில், முன்னாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள், பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று மாவட் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags

Next Story