நாமக்கல்லில் 29ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் 29ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X

Namakkal news- சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர்கூட்டம்( மாதிரி படம்)

Namakkal news- நாமக்கல்லில் வரும் 29ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல்லில் வரும் 29ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி ஒவ்வொரு மாதமும், சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு, கலெக்டர் ஆபீசில் நடைபெற உள்ளது. டிஆர்ஓ சுமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சமையல் கேஸ் நுகர்வோர்களின் குறைகளை கேட்டு அறிகிறார். அனைத்து ஆயில் மற்றும் கேஸ் கம்பெனி மேலாளர்கள், கேஸ் ஏஜெண்டுகள், டீலர்கள், தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். சமையல் கேஸ் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, கேஸ் வினியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future