/* */

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்

தொடரும் கனமழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில், ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.

HIGHLIGHTS

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்
X

கோப்பு படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி, கனமழையானது பெய்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விவசாயங்களில் ஒன்றான ரப்பர் விவசாயம் முற்றிலுமாக பாதிப்பை சந்தித்து உள்ளது.

மழைக்காலத்தில், ரப்பர் பால் வெட்ட முடியாது என்ற நிலையில், ரப்பர் பால் வெட்டும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். மாவட்டத்தில், மலையோர பகுதிகளான பெருஞ்சாணி, சிவலோகம், அருமனை உள்ளிட்ட மேற்கு மாவட்ட பகுதிகளில் பெருமளவில் ரப்பர் விவசாயம் நடைபெறும் நிலையில் அந்த பகுதிகளிலேயே அதிக அளவில் மழையும் பதிவாகி உள்ளது.

அதன்படி, புத்தன் அணை பகுதியில், 37.2 மிமீ மழையும், பெருஞ்சாணி பகுதியில் 36.0 மிமீ மழையும், சிவலோகம் பகுதியில் 27.0 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.

Updated On: 28 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  5. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  9. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  10. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?