Begin typing your search above and press return to search.
கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் கார் மோதி பலி
கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலையை கடக்க முயன்ற போது, கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழப்பு.
HIGHLIGHTS
கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியூர்துண்டுக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயி. இவரது மனைவி மிருதுவாஹினி. சம்பவத்தன்று மிருதுவாஹினி வீட்டில் இருந்து நடுப்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஈரோடு-கரூர் மெயின் ரோட்டை கடக்கும் போது கரூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த கார் இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மிருதுவாஹினி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.