/* */

அந்தியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

அந்தியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
X

பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பாலகுட்டையை பகுதியை சேர்ந்த குருசாமி மகன் குமார் (வயது 31). தவிட்டுப்பாளைம் பழனியப்பா 3வது குறுக்கு வீதியை சேர்ந்த அல்லிமுத்து மகள் சித்ரா (20). சித்ரா குமாரின் அத்தை மகள் ஆவார்.

இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே வயது வித்தியாசம் காரணமாக, இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததால் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, இன்று மாலை அந்தியூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதலர்கள் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.

போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 14 Jun 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  6. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  7. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  8. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  9. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  10. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்