/* */

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கொடுமுடி பகுதியில் உள்ள மக்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
X

கொடுமுடி காவிரி ஆறு.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் சக்ககைபோடு போட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மேட்டூர் அணைகக்கும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. அதனால் காவிரி ஆற்றில் தற்போது நாற்பதாயிரம் கன அடிக்கு மேலான நீர் சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் பவானிசாகர் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அந்த அணையில் 104 அடி நீர் நிரம்பியுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்ற நிலை உள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயரவும், ஆற்றில் மீ்ன்பிடிக்கவோ, துணி துவைக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காரணாம்பாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி உள்ளிட்ட ஊர்களில் வாழும் மக்கள் காவிரி ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கொடுமுடி வருவாய்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Updated On: 19 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை